search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்னசேலம் விபத்து"

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று அதிகாலை தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #ChinnaSalemAccident
    கள்ளக்குறிச்சி:

    காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் டவுன்ஷிப்பை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 50). இவர் சென்னை கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    இவர் தனது மனைவி மாலினி(45), மகள் ரம்யா(26) ஆகியோருடன் காரில் சேலம் செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி இன்று அதிகாலை ஒரு மாருதி காரில் தேவநாதன் தனது குடும்பத்தினருடன் சேலம் புறம்பட்டார். காரை பாபு என்ற முஜிபுர்(38) என்பவர் ஓட்டினார்.

    இன்று காலை 8 மணியளவில் அந்த கார் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ரெயில்வே கேட் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அங்குள்ள தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இதில் காரில் இருந்த தேவநாதன், அவரது மனைவி மாலினி, மகள் ரம்யா, கார் டிரைவர் பாபு ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  #ChinnaSalemAccident
    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சின்னசேலம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே நயினார்பாளையத்தை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது 54). இவர் கடலூர் கோண்டூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி சித்ரா(40), இவர்களது மகன் மகேஸ்வரன்.

    வெற்றிவேல் கடலூர் மேல்பட்டாம்பாக்கத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் மனைவி சித்ரா, மகன் மகேஸ்வரன், உறவினர் காவியா(22) ஆகியோருடன் ஒரு காரில் பெரியசிறுவத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்பு அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது சின்ன சேலம்-சிறுவத்தூர் இடையே ஆளில்லா ரெயில்வேகேட்டை கார் கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரெயில் கார் மீது மோதியது. இதில் சித்ரா, காவியா ஆகியோர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்தில் வெற்றி வேல், மகேஸ்வரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் வெற்றி வேல் இறந்தார். மகன் மகேஸ்வரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×